sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'

/

வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'

வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'

வேலை தருவதாக ரூ.12 லட்சம் மோசடி நபருக்கு '3 ஆண்டு'


ADDED : அக் 24, 2024 02:09 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், 55. இவருக்கும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் விளத்துார் பகுதியைச் சேர்ந்த வரதராஜன், 62, என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2021ல் பால்ராஜின் மகனுக்கு, சென்னை துறைமுகத்தில் தோட்ட வேலை வாங்கித் தருவதாக, வரதராஜன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக, 12 லட்சம் ரூபாயை பெற்றார் எனக் கூறப்படுகிறது. வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திரும்ப வழங்காததால் வரதராஜன் மீது மாவட்ட குற்றப்பிரிவில் பால்ராஜ் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் அவரை மார்ச் மாதம் கைது செய்தனர். வழக்கு விசாரணை துாத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குபேர சுந்தர், வரதராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us