sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சூறாவளியில் வாழைகள் சேதம்

/

சூறாவளியில் வாழைகள் சேதம்

சூறாவளியில் வாழைகள் சேதம்

சூறாவளியில் வாழைகள் சேதம்


ADDED : ஏப் 23, 2025 03:11 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார் திருநகரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்று வீசியது. இதில் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தன. ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர், பொன்னங்குறிச்சி, கரையடியூர் பகுதிகளில் ஏராளமான வாழைகள் சாய்ந்தன.

ஆழ்வார் திருநகரி ,ஏரல் பகுதிகளிலும் வாழைகள் சேதமுற்றன. விவசாயத் தொழிலாளர்கள் நேற்று அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகா அலுவலகத்தில் இருந்து வந்திருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் சேத மதிப்பை கணக்கிட்டனர்.

2023 டிசம்பர் மழை வெள்ளத்தின் போது இந்த பகுதிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின. ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது தான் விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை மேற்கொள்ளும் போது மீண்டும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றால் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு நேற்று மின்வினியோகம் சீரானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us