sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

/

மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்


ADDED : செப் 18, 2024 02:11 PM

Google News

ADDED : செப் 18, 2024 02:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த காயாமொழி பெயின்டிங் தொழிலாளி இசக்கிமுத்து, 42, உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

காயாமொழி, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (42). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவருக்கு குழந்தை இல்லை. இவர் வீரபாண்டியன்பட்டணம். சண்முகபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 14ம் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து திருச்செந்தூர், குமாரபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்து சாலையில் கிடந்துள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கடந்த 15ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது மனைவி விருப்பத்தின் படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதையடுத்து உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அவரது உடல் காயாமொழிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அரசு உத்தரவின் பேரில் இசக்கிமுத்துவின் உடலுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பொன் ரவி, எஸ்.ஐ. பாபுராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us