sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கோவில் பெயரில் அன்னதானத்திற்கு பணம் வசூல்

/

திருச்செந்துார் கோவில் பெயரில் அன்னதானத்திற்கு பணம் வசூல்

திருச்செந்துார் கோவில் பெயரில் அன்னதானத்திற்கு பணம் வசூல்

திருச்செந்துார் கோவில் பெயரில் அன்னதானத்திற்கு பணம் வசூல்


ADDED : அக் 07, 2025 06:53 AM

Google News

ADDED : அக் 07, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : திருச்செந்துார் கோவில் பெயரை பயன்படுத்தி, சஷ்டி விழாவிற்கு அன்னதானம் செய்வதற்காக, சமூக வலைதளங்களில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பக்தர்கள் உஷாராக இருக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் தினமும் அன்னதானம் வழங்கி வருகிறது. இந்நிலையில், திருச்செந்துார் கோவிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவிற்காக தனிநபர்கள் சிலர், கோவில் பெயரை பயன்படுத்தி அன்னதானத்திற்காக பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் அற்புதமணி, கோவில் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

சத்குரு சிவா என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்குகளில் பக்தர்களிடம் முறைகேடாக நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருவது தெரிந்தது. பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us