sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

குப்பையில் வீசப்பட்ட தபால்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு

/

குப்பையில் வீசப்பட்ட தபால்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு

குப்பையில் வீசப்பட்ட தபால்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு

குப்பையில் வீசப்பட்ட தபால்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு


ADDED : மே 03, 2025 12:55 AM

Google News

ADDED : மே 03, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சுண்ணாம்புகளவாசல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்திற்கு கீழ் மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய தபால்கள் நேற்று குப்பையில் சிதறி கிடந்தன. அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருச்சி, விழுப்புரம், நாலுமாவடி, செவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய தபால்கள் என, தெரியவந்தது.

அப்பகுதி மக்கள் தபால் நிலையத்தில் தகவல் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இதற்கிடையே, அந்த தபால்கள் அனைத்தும் திடீரென தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பந்தப்பட்ட கழுகுமலை தபால் நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'தபால்கள் குப்பையில் கிடப்பதாக எங்களுக்கு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று பார்ப்பதற்குள் தீயில் எரிந்த நிலையில் இருந்தது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us