sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 கொரோனா தந்த பகை; தொழிலதிபர் கொலை: தந்தை, மகன் கைது

/

 கொரோனா தந்த பகை; தொழிலதிபர் கொலை: தந்தை, மகன் கைது

 கொரோனா தந்த பகை; தொழிலதிபர் கொலை: தந்தை, மகன் கைது

 கொரோனா தந்த பகை; தொழிலதிபர் கொலை: தந்தை, மகன் கைது


UPDATED : டிச 11, 2025 09:09 AM

ADDED : டிச 11, 2025 05:29 AM

Google News

UPDATED : டிச 11, 2025 09:09 AM ADDED : டிச 11, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆலடியூரை சேர்ந்த தங்கராஜ், 75, துபாயில் நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். சொந்த ஊரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் ஆலடியூர் வந்தார். டிச., 8 இரவு ஆலடியூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த தங்கராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

கொலை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த மூக்காண்டி, 68, அவரது மகன் ரமேஷ், 32, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

மூக்காண்டி மகன் ஒருவர் துபாயில் தங்கராஜ் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் அவர் இறந்து போனதால், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டு, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

இதனால், தங்கராஜ் மீது கடுமையான கோபத்தில் இருந்த மூக்காண்டி, தன் இளைய மகன் ரமேஷ் என்பவருடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us