sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்

/

கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்

கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்

கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்


ADDED : நவ 07, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 07, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில் உள்ளது. தென்பழனி என அழைக்கப்படும் இக்கோயிலில், கந்தசஷ்டி விழா நவ., 2ம் தேதி துவங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று மாலை, சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

சம்ஹாரத்துக்காக, கழுகாசலமூர்த்தி சுவாமி கோயிலில் இருந்து எழுந்தருளினார்.

பக்தர்களின் கரகோஷங்களுக்கு இடையே, முருகபெருமான், தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடத்தப்பட்டது.

கந்த சஷ்டி விழாவின் 6வது நாளில் தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும்.

ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் 5வது நாளில், தாரகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us