/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
/
ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
ADDED : அக் 22, 2024 07:06 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், தினமும் அதிகாலை 5:00 மணிக்கு சென்று இரவு 9:00 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என, மீன்வளத்துறை உத்தரவு அமலில் உள்ளது.
ஆனால், வெளிமாவட்ட மீனவர்கள் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதால் தங்களுக்கு போதிய மீன் கிடைப்பது இல்லை என, விசைப்படகு மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பிற மாவட்டங்களில் உள்ளது போல துாத்துக்குடியிலும், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி, விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதனால், துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், 265 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன; 5,000 மீன்பிடி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.