sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துாரில் 100 அடி உள்வாங்கிய கடல் ஆபத்தை உணராமல் பக்தர்கள் ஆனந்த குளியல்

/

திருச்செந்துாரில் 100 அடி உள்வாங்கிய கடல் ஆபத்தை உணராமல் பக்தர்கள் ஆனந்த குளியல்

திருச்செந்துாரில் 100 அடி உள்வாங்கிய கடல் ஆபத்தை உணராமல் பக்தர்கள் ஆனந்த குளியல்

திருச்செந்துாரில் 100 அடி உள்வாங்கிய கடல் ஆபத்தை உணராமல் பக்தர்கள் ஆனந்த குளியல்


ADDED : செப் 19, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 19, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்த பிறகு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பவுர்ணமி என்பதால் நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

கோயில் வளாகம், வள்ளி குகை பகுதி, நாழிகிணறு, பஸ் நிலையம் பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதற்கிடையே, பவுர்ணமி என்பதால் நேற்று கடல் வழக்கத்தைவிட சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.

கடற்கரை பகுதியில் உள்ள நாழிக்கிணற்றில் இருந்து வைகுண்டர் அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் துாரத்திற்கு 100 கடல் உள்வாங்கி காணப்பட்டது.

பச்சை பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தபோதிலும், அதன் மேல் அமர்ந்த பக்தர்கள் பாசி படிந்த பாறை வழுக்கும் என்ற ஆபத்தை உணராமல் ஆனந்தமாக குளியல் போட்டனர்.

சிலர் பாறைகள் மீது நின்று செல்பி எடுத்தபடி குளித்து மகிழ்ந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us