sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

நாகலாபுரத்தில் ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

நாகலாபுரத்தில் ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகலாபுரத்தில் ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகலாபுரத்தில் ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 22, 2011 12:08 AM

Google News

ADDED : செப் 22, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதூர் : புதூர் அருகே உள்ள நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை இயக்கம் மற்றும் என்.சி.சி.இயக்கம் சார்பாக ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணி எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் முருகாண்டிசாமி தலைமை வகித்து ஓசோன் படல பாதுகாப்பு மிக அவசியம் பற்றி விரிவாக விளக்கிய பின்னர் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆங்கில முதுகலை ஆசிரியை ஆறுமுகரத்தினம், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஆறுமுகச்சாமி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசீலன், ஜே.ஆர்.சி.கவுன்சிலர் அன்பு, பள்ளியின் முன்னாள் எய்ட்ஸ் கல்வி பயிற்சியாளர் சுரேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி. அலுவலர் ஜான் ஸ்டானி வரவேற்றார். பேரணியில் மாணவ, மாணவியர்கள் ஓசோன் படல விழிப்புணர்வு வாசக அட்டைகளை கைகளில் ஏந்திய படியும் கோஷங்கள் எழுப்பிய படியும் சென்றனர். பேரணி ரெட்டியபட்டி ரோடு, விளாத்திகுளம் ரோடு, மெயின் பஜார், நாடார்தெரு, சந்தைப்பேட்டை ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, முதலியார் தெரு உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. பசுமைப்படை கல்வி ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார். பேரணியில் பசுமைப்படை இயக்கம் மற்றும் என்சிசி இயக்க மாணவ, மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us