sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 காரில் தொழிலதிபரை கடத்திய தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'காப்பு'

/

 காரில் தொழிலதிபரை கடத்திய தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'காப்பு'

 காரில் தொழிலதிபரை கடத்திய தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'காப்பு'

 காரில் தொழிலதிபரை கடத்திய தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'காப்பு'


ADDED : ஜன 02, 2026 01:50 AM

Google News

ADDED : ஜன 02, 2026 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: தொழிலதிபரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., நிர்வாகிகள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், சிதம்பரநகரை சேர்ந்தவர் உலகநாதன், 54; ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக, கோமதிபாய் காலனியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி சரவணன், 44, என்பவரிடம், 20 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.

அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்ற நிலையில், 6 லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கு கொடுத்த செக், வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப பெறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் காலை, தனசேகரன்நகர் பூங்காவில் நடைபயிற்சி சென்ற உலகநாதனை சிலர் தாக்கி, 'இன்னோவா' காரில் கடத்தி, பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

சிப்காட் போலீசார் உலகநாதனை மீட்டு, சரவணன், அவரது தம்பி பாலமுருகன், தி.மு.க., நிர்வாகி அண்ணாநகரை சேர்ந்த ஜெயராஜ், 38, ஆகியோரையும் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us