sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தேரோடும் சாலையை உடைப்பதா? அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

/

தேரோடும் சாலையை உடைப்பதா? அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

தேரோடும் சாலையை உடைப்பதா? அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

தேரோடும் சாலையை உடைப்பதா? அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்


ADDED : பிப் 20, 2025 01:32 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி,:திருச்செந்துாரில், புதிய கான்கிரீட் சாலையை நகராட்சி அதிகாரிகள் உடைக்க முயன்றதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் சமீபத்தில் பல கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில், ஆங்காங்கே மழை நீர் தேங்குவதால் வாறுகால் அமைக்கும் பணி நடக்கிறது.

இதற்காக, புதிய கான்கிரீட் சாலையை உடைத்த நகராட்சி பணியாளர்களை கண்டித்து, அப்பகுதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக போடப்பட்டுள்ள சாலையை உடைத்தால், தேரை இயக்க முடியாமல் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது:

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் நாள் தேரோட்டம் நடைபெறும்.

தேர் செல்லும்போது எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக, சில மாதங்களுக்கு முன், தெற்கு ரத வீதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

திடீரென அந்த சாலையை உடைக்கத் துவங்கியதால் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 30 அடி அகலம் கொண்ட சாலையின் ஓரத்தில் 3 அடிக்கு கான்கிரீட்டை உடைத்தால், தேர் செல்வதில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, தேரோடும் சாலையை உடைக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us