sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

/

பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

1


ADDED : ஏப் 19, 2025 12:36 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே சாயர்புரம் பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வயலட், 26. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த இவர், 2022ல் அதே பகுதி லாரி டிரைவர் லிங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஜெபா வயலட் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று வந்தார்.

அப்போது, கட்டபொம்மன் நகரை சேர்ந்த மாரிகனி, 25, என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஜெபா வயலட்டை, மாரிகனி கடந்த 16ம் தேதி ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று தாலி கட்டியுள்ளார். பின், இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த மாரிகனி, அங்கு கிடந்த கம்பால் ஜெபா வயலட்டை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். தென்பாகம் போலீசார் மாரிகனியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us