நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ் 24. அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மத்திய சிறையில் இருந்து தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வ சதீஷ் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்றார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவரது அலைபேசி சிக்னலை கொண்டு கோயம்புத்தூர் அருகே போலீசார் கைது செய்தனர். மீண்டும் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.