ADDED : அக் 11, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குருமூர்த்தி, 35, நேற்று மிளகாய் மற்றும் வெங்காய பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டார். அவருடன் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் பணி செய்தனர். திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனகா, 34, சென்னம்மாள், 29, வசந்தா, 48, ஆகியோர் காயமடைந்தனர்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு காது கேட்கும் திறன் முழுமையாக பாதிக்கப்பட்டது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. காடல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.