sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

காதல் தகராறில் தீ வைக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பலி

/

காதல் தகராறில் தீ வைக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பலி

காதல் தகராறில் தீ வைக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பலி

காதல் தகராறில் தீ வைக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பலி


ADDED : மார் 30, 2025 05:52 AM

Google News

ADDED : மார் 30, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : காதல் தகராறில் இரு வாலிபர்களால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட, 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே இளம்பவனம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் - காளியம்மாள் தம்பதியின், 17 வயது சிறுமி, கடந்த 23ம் தேதி கீழநம்பிபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அங்கிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

உடலில் தீ பற்றிய நிலையில் கூச்சலிட்ட சிறுமியை மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். எட்டையபுரம் போலீசார், சிறுமியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிய பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ், 23, அவரது நண்பர் முத்தையா, 24, ஆகியோரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று உயிரிழந்தார்.

கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த எட்டையபுரம் போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us