sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

நாயை விட்டு வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர் கைது

/

நாயை விட்டு வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர் கைது

நாயை விட்டு வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர் கைது

நாயை விட்டு வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர் கைது


ADDED : ஆக 20, 2025 03:04 AM

Google News

ADDED : ஆக 20, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:நாயை விட்டு வேட்டையாடி, புள்ளி மான் கறியை சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள குருமலையை சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி, சிலர், முயல், மான், மயில் போன்றவற்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக புகார்கள் உள்ளன. இதையடுத்து, குருமலை, ஊத்துப்பட்டி, பாறைப்பட்டி, கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடம்பூர் அருகே கொத்தாளி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, தோட்டத்தில் சோதனை நடத்தி, புள்ளி மானின் நான்கு கால்களை கைப்பற்றினர். விசாரணையில், நாயை விட்டு வேட்டையாடி புள்ளிமான் கறியை சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, பன்னீர்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முத்துப்பாண்டி, 38, என்பவரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய கார், மான் கால்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடந்தையாக இருந்த திருநெல்வேலி மாவட்டம், குறிச்சிகுளத்தை சேர்ந்த சுடலைமணியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us