sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

டூவீலரில் கடல் அட்டை கடத்தியவர் கைது

/

டூவீலரில் கடல் அட்டை கடத்தியவர் கைது

டூவீலரில் கடல் அட்டை கடத்தியவர் கைது

டூவீலரில் கடல் அட்டை கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 24, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் கடத்தப்பட்ட 15 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.

மன்னார் வளைகுடா கடலில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் மருத்துவ பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக கடல் அட்டை, கடல் குதிரை போன்றவைகளை பிடித்து வேக வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் வன உயிரின பாதுகாப்பு கடல்சார் உயரடுக்கு படை பிரிவு ரேஞ்சர் செல்வம் மற்றும் வன அலுவலர்கள் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாசிபட்டினம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா முத்துகுடாவை சேர்ந்த மருதய்யா மகன் விஸ்வநாதன் 38, சென்ற டூவீலரை சோதனை செய்தனர்.

அதில் ஒரு சாக்குப்பையில் பச்சை கடல் அட்டை 15 கிலோ இருந்தது. விஸ்வநாதனை கைது செய்த வனத்துறையினர், கடல் அட்டை, டூவீலரை பறிமுதல் செய்தனர். ஊரில் இருந்து விற்பனைக்காக கடத்தியது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us