தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ போதையில் தகராறு செய்த நபர் கொலை

போதையில் தகராறு செய்த நபர் கொலை

போதையில் தகராறு செய்த நபர் கொலை


ADDED : டிச 24, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அனவரதநல்லுார் சந்தனமாரிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன், 35, கட்டட தொழிலாளி. இவருக்கு, 31, வயதில் மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

மகாராஜன், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், 19, என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த முத்துக்குமார், அரிவாளால் மகாராஜனை வெட்டி தப்பியோடி விட்டார்.

காயமடைந்த மகாராஜன், சம்பவ இடத்திலேயே இறந்தார். முறப்பநாடு போலீசார்,முத்துக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us