sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

/

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்


ADDED : பிப் 18, 2025 09:43 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 9 வது கோவிலான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடந்தது.

ஒன்பதாம் திருவிழாவான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், 5:30 மணிக்கு திருமஞ்சனம், 6:00 மணிக்கு தீர்த்த விநியோகம், கோஷ்டி நடந்தது. காலை 7:45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையம் வந்தடைந்தது. பெருமாள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us