sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

/

வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்


ADDED : ஜன 23, 2025 01:58 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த இருப்பதாக கிடத்த தகவலின் படி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று இனிகோநகர் சதுப்பு நிலப்பகுதிகளில் திடீரென சோதனை நடத்தினர்.

அங்கு தண்ணீர் புகாத வகையில் பாலித்தீன் கவர்களால் சுற்றப்பட்டிருந்த 70 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 3 டன்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

படகுகள் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புளி, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பொருட்களுக்கு இலங்கையில் அதிக பணம் கிடைப்பதால் அங்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us