sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனுக்கு வலை

/

மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனுக்கு வலை

மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனுக்கு வலை

மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனுக்கு வலை


ADDED : ஆக 29, 2025 05:48 AM

Google News

ADDED : ஆக 29, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: குடும்பத் தகராறில், மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனை போலீசார் தேடுகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, குறுக்குச்சாலையை சேர்ந்தவர் மரிய ஆக்னஸ் செல்வன், 44. கூலி தொழிலாளி. இவரது அண்ணன் மகள் முகிலா என்பவர், கடந்த ஆண்டு கீழசெய்தலையை சேர்ந்த மாரிசெல்வம், 25, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். நான்கு மாத கர்ப்பிணியான முகிலா, சில நாட்களுக்கு முன் கணவருடன் கோபித்து, தந்தை வீட்டுக்கு வந்தார்.

முகிலாவின் சித்தப்பா ஆக்னஸ் செல்வன், நேற்று முன்தினம் இரவு, மாரிசெல்வத்தை அழைத்து சமாதானம் பேசினார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், மரிய ஆக்னஸ் செல்வனை கல்லால் தாக்கிவிட்டு, தப்பினார். மரிய ஆக்னஸ் செல்வன் உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்ட ஓட்டப்பிடாரம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாரிசெல்வத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us