/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு
/
பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு
ADDED : ஜூன் 17, 2025 01:12 AM

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே அமைந்துள்ள கொல்லம்பரம்பு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
கொல்லம்பரம்பு கிராமத்தில் இருந்து மாணவர்கள் பள்ளி செல்ல வசதியாக போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி வழியாக இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் ஜூன் 5 முதல் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பஸ் வசதி கேட்டு மாணவ - மாணவியர் சீருடையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இருந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'பஸ் வசதி இல்லாததால், 7 கி.மீ., நடந்து பள்ளி செல்ல வேண்டியுள்ளது. ஆட்டோ, வேன் ஏற்பாடு செய்தால் மாதம் 1,000 ரூபாய் செலவாகிறது. கிராம மக்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். இதனால் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.