sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லை பொதுமக்கள் போலீசார் அலைக்கழிப்பு

/

ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லை பொதுமக்கள் போலீசார் அலைக்கழிப்பு

ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லை பொதுமக்கள் போலீசார் அலைக்கழிப்பு

ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லை பொதுமக்கள் போலீசார் அலைக்கழிப்பு


ADDED : ஜூன் 06, 2025 02:55 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:ஓட்டப்பிடாரம் கோர்ட்டில் நீதிபதி இல்லாததால் பொதுமக்களும் போலீசாரும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுதந்திரப் போராட்ட வீரர் வழக்கறிஞர் வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊராகும்.

இங்கு 2022 ம் ஆண்டு தான் புதிய நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் செயல்பட துவங்கியது. புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, எப்போதும் வென்றான், பசுவந்தனை, கடம்பூர் அனைத்து மகளிர், நாரைக்கிணறு, தட்டப்பாறை, தருவைகுளம் உள்ளிட்ட 10 போலீஸ் ஸ்டேஷன் வழக்குகள் வருகின்றன.

சிவில்,கிரிமினல் வழக்குகள் ஆகிய இரண்டையும் விசாரிக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றமாக செயல்படுகிறது.

இங்கு நீதிபதியாக இருந்த ஜெயந்தி, அண்மையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு மாற்றப்பட்டார். புதிய நீதிபதி ஓட்டப்பிடாரத்திற்கு நியமிக்கப்படவில்லை.

பொறுப்பு நீதிபதியாக தூத்துக்குடி ஜெ.எம்..1 மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதே போல ஏற்கனவே இன்னொரு நீதிமன்றத்தையும் கூடுதலாக கவனிக்கிறார். எனவே வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவர் ஓட்டப்பிடாரம் வந்து செல்ல முடிகிறது.

ஓட்டப்பிடாரத்தில் தற்போது 1500 குற்ற வழக்குகள், 400க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தவிர தினமும் அடிதடி, வெட்டு குத்து வழக்குகளில் குற்றவாளிகளை ரிமாண்ட் செய்யவேண்டும்.

இவற்றுக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர். நீதிபதி இல்லை என்றாலும் வாய்தா தேதி மட்டும் நீதிமன்ற ஊழியர்களால் அறிவிக்கப்படுகிறது.

ஓட்டப்பிடாரத்துக்குட்பட்ட 10 போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களை போலீசார், தூத்துக்குடி ஜெ.எம்.1கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று நீதிபதியிடம் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைகின்றனர். இதனால் 10 ஸ்டேஷன் போலீஸாரும் மிகுந்த அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர்.

ஓட்டப்பிடாரத்தில் நீதிபதிகள் தங்குவதற்கேற்ப வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நீதிமன்றத்தை நம்பி இருக்கும் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் தற்போது மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் வக்கீல்கள் சங்கத் தலைவர் மரகதவேல் கூறியது:

மிகவும் பின்தங்கிய பகுதியான ஓட்டப்பிடாரத்திற்கு தான் நீதிபதி நியமனத்தில் முக்கியத்துவம் தர வேண்டும். நீதிபதியின்றி போலீசார், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே விரைந்து நீதிபதியை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட நீதிபதியை சந்திக்க உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us