sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம்

/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம்


ADDED : பிப் 13, 2024 01:04 AM

Google News

ADDED : பிப் 13, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி :திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நாளை(பிப்.,14) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 4:30 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் மாசி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனையும் நடக்கிறது.

ஐந்தாம் திருவிழா பிப்.,18 இரவு 7:30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் வைத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. பிப்.,20 மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில்

எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

21ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று காலை 11:00 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில்

எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம் பிப்., 23 காலை 6:30 மணிக்கு நடக்கிறது.

24ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் கோயில் இணை ஆணையர் கார்த்திக், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us