sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி

/

சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி

சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி

சாத்தை., யூனியன் கவுன்சில் பதவிக்கு பல முனைப் போட்டி


ADDED : செப் 30, 2011 02:18 AM

Google News

ADDED : செப் 30, 2011 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தான்குளம் : சாத்தான்குளம் யூனியனில் கவுன்சிலர் பதவிக்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசியல் சின்னம் வேண்டாம் என்று பயந்து சுயேட்சையாக களம் இறங்கும் கட்சி பிரமுகர்களால் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளம் யூனியனில் 14 வார்டுகள் உள்ளன. தற்போதுள்ள கவுன்சிலர்களில் பெரும்பான்மையானோர் பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போதும் இதே நிலை நீடிக்கிறது. அரசியல் கட்சியில் பணம் கட்டி சின்னம் வாங்கிய பின் சுயேட்சையாக களமிறங்கும் பிரமுகர்களால் அரசியல் களம் சுவாரஸ்ய கட்டத்தை அடைந்துள்ளது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைவதால் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சாத்தான்குளம் யூனியன் 13 வது வார்டுக்கு அதிமுக., சார்பில் அமுதுண்ணாகுடி பஞ்., செயலாளர் சுரேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக., ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், அமுதுண்ணாகுடி பஞ்., தலைவர் சாமுவேல், ராஜரீகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 8வது வார்டில் திமுக., சார்பில் காசியானந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 5வது வார்டில் அந்தோணி ஜெயசீலன், 6வது வார்டில் கணபதி, 14வது வார்டில் ஆசைத்தம்பி, 13வது வார்டில் சின்னத்துரை, 7வது வார்டில் சோமசுந்தரி, 4வது வார்டில் விக்டோரியா, 3 வது வார்டில் லிங்கத்துரை, 2வது வார்டில் ஜாக்குலின் நெல்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில் திமுக., மாவட்ட பிரதிநிதி ஜோசப் மெஸ்மின், கெங்கை ஆதித்தன், நகர செயலாளர் ஜோசப், பன்னம்பாறை நயினார், போலையர்புரம் டேவிட், முன்னாள் அவைத்தலைவர் சௌந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us