sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்

/

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்


ADDED : ஆக 01, 2011 02:28 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : தமிழக முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய ப்பட்டதை கண்டித்து கோவி ல்பட்டியில் திமுகவினர் சார்பில் மறியல் நடத்தினர்.தமிழக முன்னாள் துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி கோவில்பட்டி யூனியன் மற்றும் நகர திமுக அலுவலகத்திலிருந்து நகர செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளரும் கோவில்பட்டி யூனியன் சேர்மனுமான முருகேசன் தலைமையில் எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில்ரோடு, மெயின்ரோடு வழியாக திமுக கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். மேலும் ஊர்வலத்தின் போது ஸ்டாலின் கைது கண்டித்தும், ஜெ., வை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி கோவில்பட்டி அண்ணா பஸ்ஸ்டாண்ட் முன்பு ரோட்டில் அமர்ந்து பஸ்மறியல் செய்தனர். இதனால் அப்பகுதயில் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி.சிலம்பரசன், கிழக்கு இன்ஸ்பெக்டர் செல்வம், மேற்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொ டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, முருகன், நாராயணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 37 பேரை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். மறியலில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன்,முன்னாள் நகரசெயலாளர் கருணாநிதி, இனாம்மணியாச்சி பஞ்., தலைவர் பச்சமால், திமுக பிரதிநிதி செல்வம், நகர வக்கீல் பிரிவு அமைப்பாளர் அழகுமுருகன், நகர பொருளாளர் அண்ணாத்துரை, 10வது வட்ட செயலாளர் வேலுச்சாமி, 32வது வட்ட செயலாளர் கவுதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.எட்டயபுரம்:ஸ்டாலின் கைது கண்டித்து திமுக., சார்பில் பஸ்மறியல் போராட்டம் நடந்தது. எட்டயபுரம் பஸ்ஸ்டாண்ட் முன்பு நடந்த பஸ் மறியல் போராட்டத்திற்கு எட்டயபுரம் திமுக நகர செயலாளர் பாரதி கணேசன் தலைமை வகித்தார்.மேலும் அதிமுக அரசை கண்டித்து கோஷங்கள்எழுப்பினர். பே õராட்டத்தில் நகர இளைஞரணி அமைப்பாளர் மணியன், நகர துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய பிரதிநிதி கல்லடிவீரன், நகர பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன்,சுடலைமுத்து சின்னராமசாமி, மகாலிங்கம்,சோலை ஆறுமுகம், முகமதுராஜ்,ரவி, வேலாயுதம் உட்பட 16பேரை எப்போதும் வென்றான் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, எட்டயபுரம் சப்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)வீரபாண்டி,எட்டயபுரம் சப்இன்ஸ்பெக்டர்கள் சரஸ்வதி, ராஜகுரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து முத்துச்சாமி தீட்சிதர் மண்டபத்தில் வைத்தனர்.










      Dinamalar
      Follow us