/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெண்ணை கேலி செய்த தகராறில் அடிதடி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
/
பெண்ணை கேலி செய்த தகராறில் அடிதடி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
பெண்ணை கேலி செய்த தகராறில் அடிதடி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
பெண்ணை கேலி செய்த தகராறில் அடிதடி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
ADDED : ஆக 03, 2011 12:09 AM
வல்லநாடு : வல்லநாடு அருகே பெண்ணை கேலி செய்ததில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் அடிதடி தகராறு கொலை வழக்காக மாறியது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: வல்லநாடு அருகேயுள்ள மேலபுத்தனேரி கிராமத்தை சேர்ந்த நங்கையா(65) என்பவரின் மகனான ராஜேஷ், முறப்பநாடு படுகையூரை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகளான மேகலா என்பவரை கடந்த 1 மாதத்திற்கு முன்பு கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து மற்றும் காளிமுத்துவுன் மனைவி, குட்டிராஜா ஆகியோர் படுக்கையூரையில் வசித்துவரும் நங்கையாவின் தம்பி மாரியப்பனிடம் புகார் கொடுத்துள்ளனர். அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவாகியது. தகராறு முற்றவே காளிமுத்துவும், குட்டிராஜவும் சேர்ந்து மாரியப்பனை கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமைடந்த மாரியப்பன் திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச் சை பெற்றுவந்தார். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த மாரியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மாரியப்பனின் தங்கையான பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். ஏற்கனவே இந்த வழக்கில் காளிமுத்துவும், குட்டிராஜாவும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.