/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குலசை முத்தாரம்மன் கோயில்ஆடிக்கொடை விழா
/
குலசை முத்தாரம்மன் கோயில்ஆடிக்கொடை விழா
ADDED : ஜூலை 30, 2011 01:06 AM
உடன்குடி:குலசேகரன்பட்டணம் ஆடிக் கொடைவிழா வரும் ஆக.1ம் தேதி
துவங்குகிறது.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழா வரும்
ஆகஸ்ட் 1ம் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் துவங்குகிறது.
இரவு 10 மணிக்கு வில்லிசையும், வரும் ஆக.2ம் தேதி காலை 7 மணிக்கும், 9
மணிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், பகல் 10 மணிக்கு கும்பம்
வீதி உலாவும், பகல் 11.15 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு
அன்னதானதும், மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சிறப்பு அபிஷேக
ஆராதனையும், இரவு 8 மணிக்கு வில்லிசையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார
தீபாராதனையும், இரவு 11 மணிக்கு கும்பம் வீதி உலாவும், இரவு 11 மணிக்கு
கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 11 மணிக்கு கும்பம்
திருவீதி உலாவும், காலை 11.30 மணிக்கு வில்லிசையும், மாலை 5 மணிக்கு மஞ்சள்
நீராட்டு விழாவும், இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்
நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சங்கர் செய்து வருகிறார்.