sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மனைவியை கொன்ற கணவர் குடும்ப தகராறு காரணமா?

/

மனைவியை கொன்ற கணவர் குடும்ப தகராறு காரணமா?

மனைவியை கொன்ற கணவர் குடும்ப தகராறு காரணமா?

மனைவியை கொன்ற கணவர் குடும்ப தகராறு காரணமா?


ADDED : ஜன 05, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் இன்னாசிமுத்து, 56, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி மருதம்மாள், 54. இவர்களது மகள் விமலாதேவி, சென்னையில் அரசு டாக்டராக பணி புரிகிறார்.

கணவன்- - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை, விமலாதேவியின் தம்பி சின்ன மருது, அக்கா வீட்டுக்கு சென்றார். கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மருதம்மாள் அரிவாளால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இன்னாசிமுத்து அங்கு இருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர், சின்ன மருதுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். காயமடைந்த சின்ன மருது, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னாசிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us