/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பிளஸ் 2 மாணவி கொடூர கொலை பலாத்காரம் செய்யப்பட்டாரா?
/
பிளஸ் 2 மாணவி கொடூர கொலை பலாத்காரம் செய்யப்பட்டாரா?
பிளஸ் 2 மாணவி கொடூர கொலை பலாத்காரம் செய்யப்பட்டாரா?
பிளஸ் 2 மாணவி கொடூர கொலை பலாத்காரம் செய்யப்பட்டாரா?
ADDED : மார் 12, 2026 06:30 AM

துாத்துக்குடி: விளாத்திக்குளம் அருகே, பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேடநத்தத்தை சேர்ந்தவர் பிளஸ் 2 மாணவி. தற்போது பொதுத் தேர்வு நடந்து வருவதால், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியாக அமர்ந்து வெகு நேரம் படித்துள்ளார்.
பின், இயற்கை உபாதைக்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் உதவியோடு அப்பகுதியில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதற்கி டையே, வேடநத்தம் காட்டுப்பகுதியில், மாணவி உடைகள் களைந்த நிலையில், உடலில் சிராய்ப்பு காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரிந்தது.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலி ல் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி., மதன் தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தி கலைத்தனர்.
விசாரித்த குளத்துார் போலீசார், 'பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற விபரம் தெரியவரும்' என்றனர்.

