sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

நாட்டு குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு 'கம்பி'

/

நாட்டு குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு 'கம்பி'

நாட்டு குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு 'கம்பி'

நாட்டு குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு 'கம்பி'


ADDED : செப் 09, 2025 12:24 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி; நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து, அதை வீடியோவாக சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இலுப்பையூரணி வனப்பகுதியில் வாலிபர் ஒருவர், நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வீசி வெடிக்க செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

கோவில்பட்டி கிழக்கு போலீசார், வீடியோ வெளியிட்டதாக இலுப்பையூரணி, மறவர் காலனியை சேர்ந்த குமார், 23, என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது, 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிந்தது.

இதற்கிடையே, கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குகளில் தொடர்புடைய இளம் சிறார் ஒருவருக்கு ஆதரவாக, தீனா படத்தில் வரும் வசனத்துடன், ரீல்ஸ் வெளியிட்டதாக கோவில்பட்டி, மூப்பன்பட்டியை சேர்ந்த முகில்ராஜ், 20, என்பவரை பிடித்து, போலீசார் கடுமையாக எச்சரித்து, மன்னிப்பு வீடியோ பதிவு செய்ய வைத்தனர்.

இதேபோன்று, அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட நான்கு இளம் சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us