sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

துாத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத பணிகளில் பெண்கள்

/

துாத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத பணிகளில் பெண்கள்

துாத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத பணிகளில் பெண்கள்

துாத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத பணிகளில் பெண்கள்


ADDED : டிச 18, 2024 09:03 AM

Google News

ADDED : டிச 18, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், அவுரி இலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி, பருப்பு வகைகள், பழங்கள், ரசாயன பொருட்கள், காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், துறைமுக மூன்றாவது முனையத்தில் நடக்கும் 40 சதவீத பணிகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக துறைமுக ஆணையம் பெருமையுடன் தகவல் வெளியிட்டு உள்ளது.

துறைமுக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவல்:

துாத்துக்குடி துறைமுக மூன்றாவது முனையமான சர்வதேச கொள்கலன் முனையமான டி.ஐ.சி.டி., பாலின சேர்க்கையில் புதிய அளவுகோலை அமைக்கிறது. 40 சதவீத பெண் பணியாளர்களுடன், திட்டமிடல், கேட், ராட்சத கிரேன், ஆர்.டி.ஜி., கிரேன் செயல்பாடுகள், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியமான பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதால் சமத்துவத்தை வளர்ப்பதிலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், இந்தியாவின் கடல்சார் தொழிலை வழிநடத்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் துறைமுக சர்வதேச கொள்கலன் முனையம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us