sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்கூலிதொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

/

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்கூலிதொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்கூலிதொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்கூலிதொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை


ADDED : ஏப் 06, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்கூலிதொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு, 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி, 52. இவர், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் வாடகை வீட்டில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை, சையத் லியாகத் அலிக்கு, 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேஸ்திரிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய வெங்கட சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி விஜயன், 54. இவர் கடந்த, 2020ம் ஆண்டு டிச., 12ல், 6 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சிறுமி

கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் வந்ததால், விஜயன் தப்பினார். உமராபாத் போலீசார் போக்சோவில் விஜயனை கைது செய்தனர்.

இந்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை கட்டட மேஸ்திரி விஜயனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us