sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தீயணைப்பு வாகனத்தில் நீரின்றி 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்

/

தீயணைப்பு வாகனத்தில் நீரின்றி 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்

தீயணைப்பு வாகனத்தில் நீரின்றி 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்

தீயணைப்பு வாகனத்தில் நீரின்றி 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்


ADDED : பிப் 12, 2024 11:22 PM

Google News

ADDED : பிப் 12, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காதர்பாஷா, 46. இவர், தன் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார்.

அறுவடைக்கு தயாரான நிலையில், கரும்பு தோட்டம் நேற்று திடீரென தீப்பிடித்தது. ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள், ஒரு மணி நேரம் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர், தீயை அணைக்க முயன்ற போது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. பின், வாகனத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருவதற்குள், தீ மளமளவென பரவி, 3 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுதும் எரிந்து நாசமானது.

தீயணைப்பு துறை ஊழியர்களின் இந்த அலட்சிய போக்கால், காதர்பாஷா குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.






      Dinamalar
      Follow us