sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

/

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி


ADDED : ஏப் 28, 2025 12:21 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:

* திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி, 17; பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானார். ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர்.

* ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியை சேர்ந்த விவசாயி குப்பன், 45; இவரது உறவினர் மகன் கண்ணன், 13, என்பவரை வளர்த்து வந்தார். ஆயர்பாடி அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன். அமராபுரம் கிராமத்திற்கு பசுமாடுகளை மேய்க்க நேற்று முன்தினம் சென்றார். வீடு திரும்பாத நிலையில், குப்பன் புகாரின்படி அவளூர் போலீசார் தேடினர். அமராபுரம் கிராம குளத்தில் சிறுவனின் சடலம் மிதந்தது.

* வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனுாரை சேர்ந்த மூர்த்தி மகன் பிரதீப், 16; பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன்தினம் மாலை கோவில்மேடு பகுதி ஏரியில் குளித்தபோது, நீரில் மூழ்கி பலியானார்.






      Dinamalar
      Follow us