ADDED : பிப் 17, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரத்தில், கூட்டுறவு துணை பதிவாளர், அவர் மனைவி மீது, திருப்பத்துார் விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்துார் அடுத்த நாயுடு வட்டத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரன், 54; கந்திலி வட்டார கூட்டுறவு துணை பதிவாளர். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக எழுந்த புகாரில், போலீசார் விசாரித்தனர்.
இதில், அவர் மற்றும் அவரது மனைவி பெயரில், 48.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பது தெரியவந்தது. திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

