sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

காத்திருப்பு பட்டியலில் டி.எஸ்.பி.,

/

காத்திருப்பு பட்டியலில் டி.எஸ்.பி.,

காத்திருப்பு பட்டியலில் டி.எஸ்.பி.,

காத்திருப்பு பட்டியலில் டி.எஸ்.பி.,


ADDED : ஜன 04, 2025 02:37 AM

Google News

ADDED : ஜன 04, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருப்பத்துாரில், டிச., 30ல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, 160க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, திருப்பத்துார் டி.எஸ்.பி., ஜெகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் மறியல் செய்யும் வரை அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்ததாகவும், மேலும், முன்னெச்சரிக்கையாக மறியலுக்கு வரும்போதே அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததாலும், அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். திருப்பத்துார் டவுன் இன்ஸ்., ஜெயலட்சுமி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.






      Dinamalar
      Follow us