ADDED : ஏப் 10, 2026 10:37 PM
அ நிறம் | அளவு
ஆம்பூர்: மது போதையில் மாணவர்களை ஆபாசமாக பேசிய தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் சுகுமார், 59; அதே பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார். நேற்று, பள்ளிக்கு மது போதையில் சென்றவர், மாணவ - மாணவியரை ஆபாசமாக திட்டியுள்ளார்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆம்பூர் டவுன் போலீசார், வட்டார கல்வி அலுவலர் பீட்டர் ஆகியோர், அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் சுகுமாரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, வட்டார கல்வி அலுவலர் பீட்டர் உத்தரவிட்டார்.
