sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

பெண் அணியும் 'பர்தா' உடையில் கொள்ளையடித்த ஆண் சிக்கினார்

/

பெண் அணியும் 'பர்தா' உடையில் கொள்ளையடித்த ஆண் சிக்கினார்

பெண் அணியும் 'பர்தா' உடையில் கொள்ளையடித்த ஆண் சிக்கினார்

பெண் அணியும் 'பர்தா' உடையில் கொள்ளையடித்த ஆண் சிக்கினார்


ADDED : ஆக 06, 2025 10:47 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர்:ஆம்பூரில், பர்தா அணிந்து, பெண்ணிடம் 40 சவரன் நகைகளை கொள்ளையடித்தவரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் முகமது புறா தெருவை சேர்ந்தவர் முபாரக் பாஷா, 52. பேன்சி ஸ்டோர் உரிமையாளர். இவரது மனைவி சுல்தானா, 48. தம்பதிக்கு, 21 வயதில் மகள் உள்ளார்.

கடந்த, 31, முபாரக் பாஷா வழக்கம் போல பேன்சி ஸ்டோருக்கு சென்றார். அன்று மதியம், 12:30 மணிக்கு பர்தா எனும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் உடை அணிந்த ஒருவர், அவரது வீட்டிற்கு சென்று, திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறி கதவைத் திறக்க வைத்தார். பின், சுல்தானா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டிலிருந்த, 40 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பினார்.

ஆம்பூர் போலீசார், அப்பகுதியிலுள்ள, 'சி.சி.டி.வி.,' கேமரா காட்சிகள் மூலமாக ஆம்பூர் பர்ணக்கார தெருவை சேர்ந்த தன்வீர் அகமது, 36, என்ற ஆண் என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, 31 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us