sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

/

சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

4


ADDED : அக் 08, 2025 06:55 AM

Google News

ADDED : அக் 08, 2025 06:55 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அம்பேத்கர் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அடிப்படை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா கோரி, நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. இதை கண்டித்து, நேற்று வி.ஏ.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தர்ணாவில் ஈடுபட்டோர் கூறுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின்போது, இப்பகுதிக்கு ஓட்டு கேட்க வந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., தேவராஜ், இங்குள்ள மாரியம்மன் கோவில் முன், கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து, 'என்னை வெற்றி பெற வைத்தால், உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார். அதை நம்பி ஓட்டு போட்டோம். அவர் வெற்றி பெற்ற பின், இதுவரை ஒருமுறை கூட எங்கள் பகுதிக்கு வரவில்லை' என்றனர்.

அவர்களிடம் நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா, நாட்றம்பள்ளி போலீசார் சமாதான பேச்சு நடத்தினர். அதை ஏற்காமல், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், தர்ணா தொடரும் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us