sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'

/

தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'

தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'

தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 22, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்; முன்விரோதத்தில், தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் விஜய், 40; தொழிலாளி. இவருக்கு சொந்தமான இடத்தில், கட்டட பணி நடக்கிறது. கட்டட மேஸ்திரி மோகன், 35, மற்றும் தொழிலாளிகள் நேற்று பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மோகன் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆம்பூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.

இதில், சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 38, என்பவருக்கும், விஜய்க்கும் முன்விரோதம் இருந்தது. அதனால் விஜயை கொல்ல விக்னேஷ், பல நாட்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.

கட்டட பணி நடந்து வரும் வீட்டில், யாருக்கும் தெரியாமல், மின் ஒயர்களில் இணைப்பை மாற்றி கொடுத்து, விஜயை கொல்ல முயன்றதும், இதில் கட்டட மேஸ்திரி மோகன் சிக்கி காயமடைந்ததும் தெரியவந்தது. போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us