/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மனைவி கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக கணவன்
/
மனைவி கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக கணவன்
ADDED : ஜூலை 10, 2025 08:18 AM
திருப்பத்துார் : நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உடையராஜாபாளையத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், 32; கூலி தொழிலாளி. இவர் மனைவி சுமதி, 28. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சுமதி அடிக்கடி மொபைல் போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது நடத்தையில் சத்யராஜுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில், சத்யராஜ் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியில் சுமதி உயிரிழந்து விட்டார். ஆம்பூர் தாலுகா போலீசார், சத்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.