sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ஏலகிரியில் கரடி தாக்கி வியாபாரி படுகாயம்

/

ஏலகிரியில் கரடி தாக்கி வியாபாரி படுகாயம்

ஏலகிரியில் கரடி தாக்கி வியாபாரி படுகாயம்

ஏலகிரியில் கரடி தாக்கி வியாபாரி படுகாயம்


ADDED : ஜூலை 26, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோலார்பேட்டை:ஏலகிரி மலையில், கரடி தாக்கியதில் பைக்கில் சென்ற தேங்காய் வியாபாரி படுகாயமடைந்தார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வார வெள்ளிக்கிழமையில் சந்தை நடக்கிறது. ஜோலார்பேட்டை அருகே வணக்கம்பட்டி மண்டலவாடியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, 57, நேற்று முன்தினம், சந்தையில் பொருட்களை வாங்க, தன் ஹோண்டா பைக்கில் சென்றார்.

பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 8:30 மணியளவில் வீடு திரும்பினார். மலைப்பாதை, 12-வது கொண்டை ஊசி வளைவில், சாலையோரம் நின்றிருந்த கரடியை பார்த்து பயந்த கிருஷ்ணமூர்த்தி, பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார்.

அ ப்போது, கரடி அவர் மீதேறி கடித்து, தாக்கியது. கிருஷ்ணமூர்த்தி அலறி கூச்சலிட்டதால், கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியது. அந்த வழியாக வந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏலகிரி மலை போலீசார் விசா ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us