sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியின் மண்டையை உடைத்த தொழிலாளி

/

காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியின் மண்டையை உடைத்த தொழிலாளி

காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியின் மண்டையை உடைத்த தொழிலாளி

காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியின் மண்டையை உடைத்த தொழிலாளி


ADDED : டிச 27, 2024 12:49 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஏ.கே. மோட்டூரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ்,49. இவரது மனைவி விஜயா,39. இவர்களுக்கு, 4 மகள்கள் உள்ளனர். 3 மகள்கள் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வரும் நிலையில், ஒரு மகள் திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்ததால், ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மனைவியை கண்டித்தார். இதனால், விஜயா, கணவர் தன்னை தாக்குவதாக கூறி, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில் கடந்த, 4 நாட்களுக்கு முன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து கோவிந்தராஜ், ஓசூருக்கு கட்டட வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று இரவு மனைவி விஜயாவிற்கு, கோவிந்தராஜ் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, மொபைல்போன் பிசியாக இருந்தது. சந்தேகமடைந்த கோவிந்தராஜ், இரவோடு இரவாக, ஓசூரிலிருந்து, ஏ.கே. மோட்டூருக்கு வந்தார். அப்போது மனைவி வீட்டில் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார்.

பின்னர், தன் மருமகன் பிரசாந்துடன் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் தேடி சென்றபோது, விஜயா தன் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார். கோவிந்தராஜை பார்த்ததும், கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரது ஸ்கூட்டியை தீ வைத்து கொளுத்தினார். மனைவியை கல்லால் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us