sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு '22 ஆண்டு'

/

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு '22 ஆண்டு'

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு '22 ஆண்டு'

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு '22 ஆண்டு'


ADDED : ஜூலை 31, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார், திருப்பத்துார் அருகே, சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு, 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி ராஜேந்திரன், 32. இவர், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த, 2019 மார்ச், 21ல், கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார். ஆலங்காயம் போலீசார், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் ராஜேந்திரனை, போக்சோவில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரனுக்கு, 22 ஆண்டு சிறை மற்றும், 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us