sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

/

ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு


ADDED : ஜூலை 31, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாணியம்பாடி:கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் ராஜேஷ், 32. இவரது மனைவி ரோகினி, 30. தம்பதிக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் வசிக்கும் தந்தையை பார்க்க, மனைவி, குழந்தையுடன், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜேஷ் சென்னை புறப்பட்டார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் சென்றபோது, ராஜேஷ், ரோகினி இருவரும் குழந்தையை சீட்டில் உட்கார வைத்து விட்டு, ரயிலிலுள்ள கழிப்பறைக்கு சென்றனர். ராஜேஷ் திரும்பிய நிலையில், ரோகினி வரவில்லை. கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் ரயில், காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் சென்றது.

அங்கு, ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் ரயில் தண்டவாளம் வழியே, ஜோலார்பேட்டை வரை தேடி சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து ரோகினி தவறி விழுந்து தண்டவாளத்தில் பலியாகி கிடந்தது தெரிந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us