sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

/

எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

எம்.பி., ராஜாவை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 12, 2011 01:11 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : நீலகிரி எம்.பி., பதவியிலிருந்து ராஜாவை நீக்கக்கோரி, அவிநாசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜவை, பதவி நீக்கம் செய்யக்கோரி சேவூர் ரோடு பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். நகரத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாநில பேச்சாளர் பிரபாகரன் பேசியதாவது: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, திகார் சிறையில் பல மாதங்களாக உள்ளார். தொகுதியில் எவ்விதமான வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. மருத்துவ உதவி தேவைப்படுவோர் உள்ளிட்ட பலர், எம்.பி., யிடம் கடிதம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய எம்.பி., ராஜாவை, உடனடியாக சபாயநாயகர் பதவி நீக்கம் செய்து, இடைத்தேர்தல் நடத்த வேண்டும். '2ஜி' ஊழலில் தொடர்புடைய அனைவரையும் சி.பி.ஐ., விசாரணை வளையத்திற்குள் சேர்க்க வேண்டும். ஊழலுக்கு துணை போகும் காங்.,கட்சியை அடுத்த தேர்தலில் மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பர். பா.ஜ., ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் அசுர வேகத்தில் நடக்கின்றன, என்றார்.






      Dinamalar
      Follow us