sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மொபைல்போன் டவர் அகற்ற வேண்டுகோள்

/

மொபைல்போன் டவர் அகற்ற வேண்டுகோள்

மொபைல்போன் டவர் அகற்ற வேண்டுகோள்

மொபைல்போன் டவர் அகற்ற வேண்டுகோள்


ADDED : ஜூலை 25, 2011 09:15 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் டவர்களால், முருகம்பாளையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; கதிர்வீச்சு காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதால், டவர்களை அகற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.அம்மனு விவரம்:முருகம்பாளையம் எக்ஸ்டன்சன் ஆறாவது வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் மொபைல்போன் டவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டவர் அமைப்பதற்காக சாக்கடை, குடிநீர் வடிகால்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, பிரதான வழித்தடம் வழியாக கழிவுநீர் கொண்டு செல்லப்படுவதால், குடியிருப்பு பகுதி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, சிலர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நோய் தாக்கி விடுமோ என்ற அச்சத்துடனேயே குடியிருக்க வேண்டியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள டவர்களை பார்வையிட்டு, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us