sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு

/

 திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு

 திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு

 திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,க்கு கட்டாய ஓய்வு


ADDED : டிச 01, 2025 12:55 AM

Google News

ADDED : டிச 01, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சேலத்தில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சந்திரசேகரன், நவ., 26ம் தேதி, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் செயல்படும், குற்ற ஆவண காப்பகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு முன், மாவட்ட குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு என, பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.

இவர், தர்மபுரியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது, லஞ்ச புகாரில் சிக்கினார். இது தொடர்பாக, அவரிடம் பல கட்டமாக விசாரணை நடந்தது. புகார் தொடர்பாக, அவருக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் தீரஜ்குமார், திருப்பூர் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த உத்தரவு நகல், சந்திரசேகனுக்கு, திருப்பூர் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நேற்று வழங்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'டிஸ்மிஸ் செய்வதற்கு பதிலாக, தண்டனையை குறைத்து வழங்குவதற்காக, கட்டாய பணி ஓய்வு வழங்குவது, காவல் துறையில் உள்ள நிர்வாக நடைமுறைகளில் ஒன்று' என்றனர்.






      Dinamalar
      Follow us